இயக்குனர் கௌரவின் ‘கௌரவ ஆட்டம்’ ; அப்செட்டான உதயநிதி..!


தூங்கா நகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கௌரவ் எப்ப்போதும் மீட்டருக்கு மேல் பேசக்கூடியவர்.. அதைவிட அதிகமாக அவருக்குள் நடிக்கும் ஆசையும் இருக்கிறது.. தூங்கா நகரத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் பிரபுவை வைத்து தான் இயக்கிய ‘சிகரம் தொடு’ படத்திலும் வில்லனாக நடித்தார்..

தற்போது உதயநிதியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் கௌரவ்.. இந்தப்படத்திலும் ஒரு போலீஸ் கேரக்டர் ஒன்றுக்கு முக்கியத்துவம் இருக்கிறதாம். ஆனால் உதயநிதியிடம் கதை சொல்லும்போது அந்த கேரக்டரை பற்றி டம்மியாக சொல்லிவிட்டு, அந்த கேரக்டரில் தானே நடித்து வருகிறாராம்.

மேலும் தனக்கான் பில்டப் காட்சிகள் மட்டும் போதாதென்று, ஒரு சண்டைக்காட்சியையும் சேர்த்து எடுக்க இருக்கிறாராம். அரசால் புரசலாக விஷயம் உதயநிதி காதுகளுக்கு போக, நீங்க ஹீரோவா இல்ல நான் ஹீரோவா என பொங்கிவிட்டாராம் உதயநிதி.. ‘இல்லஜி.. சும்மா சின்ன ரோல் தான்’ என மழுப்பி சமாளித்து வருகிறாராம் கௌரவ்.