வட போச்சே ; வருத்தத்தில் த்ரிஷா..!


காதலாகட்டும், இல்லை கல்யாணமாகட்டும் தெளிவான முடிவெடுக்க முடியாமல் குழம்புகிறாராம் த்ரிஷா.. ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராணாவுடன் இருந்த நட்பை தூக்கி கடாசிவிட்டுத்தான் தயாரிப்பாளர் வருண்மணியனுடன் நிச்சயதார்த்தம் பண்ணும் அளவுக்கு போனார்.. அது கூட ராணாவை வெறுப்பேற்றுவதற்காக அவசர கதியில் யோசிக்காமல் செய்தது தான் என்று சொல்கிறார்கள்..

சரி வருண்மணியன் வேண்டாம் என திருமணத்தையே நிறுத்தினாரே, அதுகூட மீண்டும் ராணாவை தன் வழிக்கு கொண்டு வருவதற்காகத்தான் என்றும் சொல்லப்பட்டது.. ஆனால் நடப்பதோ வேறாக இருக்கிறது. ஆந்திராவில் தூங்காவனம் பிரிமியர் ஷோ பார்க்கவந்தபோது கூட ரானா எதிரே வர, படக்கென அந்த இடத்தை விட்டு விலகினார் த்ரிஷா. அதன்பின் நலம் விரும்பிகள் இருவரையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்தார்களாம்.

சரி…. நட்புக்குள் ஊடல் இருப்பது சகஜம் தான் என நினைத்த வேளையில், அருந்ததி நடிகை சமீபத்தில் ராணாவின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடினாராம்.. இதை அறிந்த த்ரிஷா கடும் கோபத்திலும் விரக்தியிலும் இருப்பாதாகவும் சொல்லப்படுகிறது.. கூட்டி கழித்து பார்த்தால் ‘வட போச்சே’ கதை தான்..