நடிகரை சிறைக்கு அனுப்பிய பழிவாங்கும் குணம்..!


சினிமாவில் ஒருவரை ஒருவர் பழிவாங்கும் போக்கு பல முன்னணி நட்சத்திரங்கள் இயக்குனர்களிடம் இருக்கவே செய்கிறது. அது எல்லை மீறும்போது என்ன நடக்கும் என்பதற்கு சமீபத்தில் கைத்து செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ள மலையாள நடிகர் திலீப் மிகச்சரியான உதாரணம்.

கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் கூட, இந்த சம்பவத்தின் பின்னணியில் யாரோ முக்கியமான ஒருவர் இருக்கிறார் என பேசப்பட்டு வந்தது. குறிப்பாக நடிகர் திலீப்பின் மீது கூட சந்தேகப்பார்வை நீண்டது..

இரண்டு வருடங்களுக்கு முன் பாவனா ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு வரும் வாய்ப்புகளை முன்னணி நடிகர் ஒருவர் குறுக்கிட்டு தடுத்துவிடும் வேலையை செய்து வருகிறார் என பகீர் கிளப்பினார்.. ஆனால் அவருடைய பெயரை மட்டும் கடைசி வரை சொல்ல மறுத்துவிட்டார் பாவனா.. அது திலீப் தான் என பலரும் அப்போதே பேசிக்கொண்டார்கள்.

ஆனாலும் திலீப்பின் பழிவாங்கும் போக்கு அத்துடன் நின்றுவிடவில்லை.. பாவனாவை கடத்தி, அவரை பாலியல் சித்தரவதை செய்து அதை படமாக்கி அவரை மிரட்ட திட்டமிட்டார்.. அவமானத்துக்கு பயந்து பாவனா இதை வெளியில் சொல்லமாட்டார் என திலீப் தப்புக்கணக்கு போட்டார்..

ஆஅனால் பாவனா துணிந்து போலீஸுக்கு சென்றார்.. சில மாதங்களாக திலீப் நல்லவர் போல் வேஷம் போட்டாலும், தற்போது வேஷம் களைந்து சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்கிறார். இத்துடன் திலீப்பின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்கிறார்கள்.