நடிகைக்காக இறங்கிவந்த வெங்கட் பிரபு..!


சென்னை-28 இரண்டாம் பாகத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருப்பவர் நடிகை சனா அல்தாப். கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘மரியம் முக்கு’ படத்தை பார்த்துவிட்டுத்தான் இவரை இந்தப்படத்தில் நடிக்க அழைத்து வந்தாராம் வெங்கட் பிரபு.

சென்னை-28 படத்தில் நடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே அவருக்கு பரீட்சை தொடங்கிவிட்டதாம்.. பரீட்சைக்கு படிக்க வேண்டி இருந்ததால் நடிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் திணறினாராம் சனா அல்தாப். இதையறிந்த வெங்கட் பிரபு, படிப்புதான் முக்கியம், முதலில் தேர்வை எழுதி முடித்துவிட்டு வா, அதன்பின் உன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறேன் என சுதந்திரமாக வரை விட்டுவிட்டாராம். ஒரு அறிமுக நடிகையான தனக்கு வெங்கட் பிரபு இந்த அளவு சலுகை காட்டியது கண்டு மலைத்துப்போனாராம் சனா அல்தாப்.