வெங்கட் பிரபுவும் ஏ.எல்.விஜய்யும் காட்டியது வெறும் பிலிம் தானா..?

தலைவா, சைவம், இது என்ன மாயம் படம் பார்த்தவர்களுக்கு இந்த ஏ.எல் விஜய் தான் தெய்வத்திருமகள், மதராச பட்டிணம் படங்களை இயக்கினாரா என்கிற சந்தேகம் எழாமல் இருந்திருக்காது. அதேபோல ‘மங்காத்தா’ படத்தை பார்த்து பிரமித்தவர்களுக்கு இந்த வெங்கட்பிரபு தானா பிரியாணி, மாஸ் படங்களை இயக்கினார் என்கிற சந்தேகமும் ஏற்படவே செய்திருக்கும்..

காரணம் இந்த இரண்டு இயக்குனர்களின் சமீபத்திய படங்கள் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல், ஆடியன்சின் கவனத்தை கூட ஈர்க்க தவறிவிட்டன. வெங்கட் பிரபுவை பார்த்து முன்னணி நடிகர்கள் தெறித்து ஓட, ‘சென்னை-28 போல சின்ன பட்ஜெட் படமாக எடுத்து, தன்னை நிரூபிக்கும் விதமாக மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்திருக்கிறார் வெங்கட்பிரபு.

ஏ.எல்.விஜய்க்கும் கிட்டத்தட்ட இதே நிலைமை தான். அப்படியானால் இவர்களது முந்தைய ஹிட் படங்களின் கதையம்சத்திலும் வெற்றிகளிலும் பின்னணியில் இருந்த சூத்திரதாரி யார்..? அவருக்கு என்ன ஆச்சு..? ஆக, வெங்கட்பிரபுவும் ஏ.எல்.விஜய்யும் இதுநாள் வரை காட்டியது எல்லாம் வெறும் பிலிம் தானா என அடுக்கடுக்கான சந்தேகங்களை எழுப்புகிறார்கள் சில வில்லங்க ரசிகர்கள்.. எப்படியும் இவர்களது அடுத்த படத்தில் அது தெரியத்தானே போகிறது.