வெற்றிமாறனை நட்டாற்றில் விட்ட தனுஷ்..?


தனுஷின் திரையுலக வரலாற்றில் அவரை மாற்றிய படம் ‘ஆடுகளம்’. வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்திற்காக தனுஷ் தேசிய விருதும் பெற்றார். இதன்பிறகு நீண்ட வருடங்கள் கழித்து ‘வடசென்னை’ படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். ஆனால் இப்போது ‘வட சென்னை’ படம் தொடர்ந்து வளருமா, வளராதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

காரணம் தனுஷ் ஒருபக்கம் தன்னுடைய ‘பவர் பாண்டி’ படத்தை இயக்குவதிலும், இன்னொரு பக்கம் ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் நடிப்பதிலும் பிஸியாக உள்ளார். அதனால், ‘வட சென்னை’ படம் தொடர்ந்து நடக்குமா என்பது தெரியவில்லை. இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறிய விஜய்சேதபதியும் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டாராம்.

இதனிடையே, ஜி.வி.பிரகாஷைச் சந்தித்த வெற்றிமாறன் தனக்காக ஒரு படத்தில் நாயகனாக நடிக்கும்படி கேட்டதாகவும், கதையைக் கூடக் கேட்காமல் உடனே சரி என ஜி.வி.பிரகாஷ் சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்..