இழவு வீட்டில் செல்பி எடுத்த விஜய்.. கடுப்பான பொதுஜனம்..!

இன்றைக்கு செல்பி மோகம் பிரபலங்கள் முதல் சாதாரண மனிதன் வரை பிடித்து ஆட்டுகிறது. கோவிலுக்கு சாமி கும்பிடப்போனால் கூட, கோவில் பிரகாரத்தில் நின்றவாறு ஒரு செல்பி, முடிந்தால் கடவுள் சிலையுடன் சேர்த்து ஒரு செல்பி எடுத்து அதனை உடனுக்குடன் பேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களில் போட்டு லைக்குகளை அள்ளவேண்டும்.. இதுதான் செல்பி மோகம் கொண்டவர்களின் எண்ணம்.

சந்தோஷ நிகழ்வுகளில் சரி.. ஆனால் சாவு வீட்டிலுமா செல்பி எடுக்கவேண்டும். இப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரின் மறைவுக்காக அஞ்சலி செலுத்தவும், அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவும் டெல்லி சென்றிருந்தார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப். ஆனால் நண்பரின் இறுதி ஊர்வலத்தின்போது பலர் செல்பி எடுத்து அதை நண்பர்களுடன் ஷேர் பண்ணிக்கொண்ட செயலை பார்த்து தனது வேதனை அடைந்த அமிதாப், சாவு வீட்டிலுமா செல்பி எடுக்கவேண்டும் என கொதித்த நிகழ்வும் நடந்தது.

இப்போது இதேபோன்றதொரு செயலில் நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளது ரசிகர்களை தாண்டி அவர்மீது அபிமானம் வைத்திருக்கும் பொதுமக்களிடம் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தனது ரசிகர் ஒருவரின் மறைவுக்காக அஞ்சலி செலுத்தச்சென்றபோது அங்குள்ள ரசிகர்களின் வற்புறுத்தலுக்காக செல்பி எடுத்துள்ளார் விஜய்.

விஜய் தானே விரும்பி எடுக்காவிட்டாலும் கூட, அங்கு இருந்த ரசிகர்களுக்காக அவர் இதை செய்யப்போக, ரசிகர்கள் அதை பேஸ்புக்கில் போட்டு பெருமை தேட, வெறும் வாயை மெல்லும் அஜித் ரசிகர்களுக்கு சரியான தீனி போட்டதுபோல ஆகிவிட்டது. உடனே அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ‘மெண்டல் விஜய் ஃபேன்ஸ்’ என்கிற புதிய ஹேஸ்டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்களை பயங்கரமாக கலாய்த்து வருகிறார்கள்.