விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெல்லிசை’…

வித்தியாசமான கதைகளில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் விஜய் சேதுபதி அடுத்து நடித்து வரும் படம் ‘மெல்லிசை’.

ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில் தீபன் பூபதி , ரெதேஷ் வேலு தயாரிக்கிறார்கள்.

‘கற்றது தமிழ், தங்க மீன்கள்’ படத்தின் இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரஞ்சித் ஜெயக்கொடி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

விஜய் சேதுபதி ஜோடியாக ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்குப் பிறகு காயத்ரி நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்கு காயத்ரியைத் தவி வேறு யாரையும் சிந்திக்கக் கூட இல்லையாம் இயக்குனர்.

‘‘நவீனமாக்கபட்ட நகர வாழ்வின் சிக்கலை சொல்லும் கதை .இந்த நகரத்தை எதனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது . ஆனால் இந்த நகரம் ஏதோ வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது . இந்த நகரத்துக்கு கழுகு கண்கள். இங்கு எல்லோரும் சுவராசியமாக வாழ்கிறோம், ஆனால் நிம்மதியாகவும் , சுதந்திரமாகவும் வாழ்கிறோமா’ என்பது தான் இந்த கதையின் கரு,” என்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.

‘மெல்லிசை’ என்பது மேலும், மேலும் கேட்கத் தூண்டும் சுகமான இசை வடிவம். அதோடு இந்த படத்தின் கதாபாத்திரங்கள் இசை சம்பந்தப்பட்டவர்கள். அதுவே ‘ மெல்லிசை ‘ என தலைப்பு வைக்கவும் காரணமாக அமைந்தது.

இசைக்கும் , நவீன கதை அமைப்புக்கும் களமாக ’மெல்லிசை’ படத்தின் இசை அமைப்பாளர் சாம்.C.S என்னும் இசை அமைப்பாளர் அறிமுகம் ஆகிறார். விஜய் சேதுபதி இந்த கதையை எதேச்சையாக கேட்ட மாத்திரத்தில் கால்ஷீட் தர ஒப்பு கொண்ட பின் நான் பேசியது ஒளிப்பதிவாளர் தினேஷிடம் தான். அவர் கொடுத்த நம்பிக்கையும் அதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் காட்டிய வேகமும் பிரமாதம் .

இப்போதுதான் கதை சொன்ன மாதிரி இருக்கிறது , இதோ படப்பிடிப்பு இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறது.

‘மெல்லிசை’, நிச்சயம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் படமாக இருக்கும்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி .