விக்ரம் மகனுக்கு வந்த புதிய சோதனை


சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் ஹீரோவாக அறிமுகமாகும் வரிசையில் விக்ரம் மகன் துருவ்வும் இடம் பிடித்துவிட்டார். ஆனால் முதல் படமே அவருக்கு மிகப் பெரிய சங்கடத்தை கொடுத்துள்ளது. தன்னை ஹீரோவாக உயர்த்திய இயக்குனர் பாலா மூலமாகவே தனது மகனை அறிமுகம் செய்ய நினைத்தார் விக்ரம்.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி என்கிற பெயரில் வெளியான படத்தை தமிழில் வர்மா என்கிற பெயரில் இயக்கினார் பாலா. ஆனால் வர்மா படத்தை முடித்த பின்பு அந்த படத்தை பார்த்த தயாரிப்பாளர் நான் நினைத்தது போல இந்த படத்தை பாலா இயக்கவில்லை என்றும் இந்த படம் தனக்கு பிடிக்கவில்லை ன்பதால் ரிலீஸ் செய்யப்போவதில்லை என்றும் அதிரடியாக அறிவித்துவிட்டார். அத்துடன் அதே படத்தை மீண்டும் வேறு ஒரு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்கிற பெயரில் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்த நிலையில் ஒரிஜினலான அர்ஜுன் ரெட்டி ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்டா தமிழில் ஓரளவுக்கு பிரபலமாகி விட்டார். அதனால் அவர் ஏற்கனவே தெலுங்கில் நடித்த படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் அவர் ஏற்கனவே நடித்த துவாரகா என்கிற படத்தை அர்ஜுன் ரெட்டி என்கிற பெயரிலேயே வரும் 26-ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.

ரசிகர்கள் ஒருவேளை இதைத்தான் ஒரிஜினல் அர்ஜுன் ரெட்டி என நினைத்துக்கொண்டு இந்த படத்தை பார்த்தார்கள் என்றால் அடுத்ததாக விக்ரம் மகன் நடித்து வரும் ஆதித்ய வர்மா படம் வரும்போது அதன் மேல் பெரிய ஈர்ப்பு வேலை வாய்ப்பு இல்லை.. இருந்தாலும் ஆதித்ய வர்மா வரும்போது இந்த டப்பிங் படத்தின் சாயல் எல்லாம் மறைந்துவிடும் என்பதால் பெரிய அளவில் விக்ரம் மகனுக்கு பாதிப்பு இருக்காது என்றே தெரிகிறது