விஷால் மீது வழக்கு ; உச்சகட்ட பயத்தில் சரத்குமார்..!

நடிகர்சங்க தேர்தல் தீவிரமடைந்து வரும் நேரத்தில் பிரச்சாரத்தை முடுக்கி விடாமல் இப்போதும் கூட சரத்குமார் தனது பக்கம் உள்ள தவறுகளை மறைப்பதற்காக தவறுக்கு மேல் தவறாகத்தான் செய்கிறாரே என நடிகர்சங்கத்தில் உள்ள சில நடுநிலை உறுப்பினர்கள் அபிபுல்லா சாலையில் நடிகர்சங்கத்தின் அருகில் உள்ள டீக்கடையில் நின்று பேசிக்கொண்டு இருப்பதை கேட்க முடிந்தது..

இன்னும் கொஞ்சம் காதை தீட்டிக்கொண்டு கவனித்தபோது, விஷால் மீது தற்போது அவர் வழக்கு தொடர்ந்துள்ள விவகாரத்தை பற்றி கவலையுடன் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது. விஷாலிடம் பல வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், இதற்கு சங்கத்தின் அலுவலகத்தில் இருக்கும் நாசரின் அனுதாபிகள் சிலர் முக்கியமான டாக்குமென்ட்டுகளை விஷால் தரப்புக்கு தந்ததும் தான் காரணம் என அவர்கள் பேச்சிலிருந்து தெரிய வந்தது.

அதனால் தான், நடிகர்சங்கத்தில் இன்னும் ஐந்தாண்டுகளாக வருமான வரி செலுத்தாது, எஸ்.பி.ஐ சினிமாஸுடன் ஒப்பந்தம் செய்தபோது ஒன்பது கமிட்டி உறுப்பினர்களில் இருவர் மட்டுமே கையெழுத்து போட்டது என சில விவகாரங்களை மட்டும் வெளியே சொல்லியிருக்கிறார் விஷால்.. இதுபோல இன்னும் பல விஷயங்களுக்கு ஆதாரங்கள் விஷாலிடம் சிக்கியுள்ளதாம்.

ஒருவேளை விஷால் அணி தேர்தலில் ஜெயித்தால் சரத்குமார் சட்டப்படி சிக்கலை சந்திக்கவேண்டி இருக்கும் என பேசிக்கொண்டதையும் கேட்க முடிந்தது. அப்படி என்றால் என்ன தைரியத்தில் விஷால் மீது சரத்குமார் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்றுதான் புரியவில்லை. ஆக சரத்குமாரின் தோல்வி பயம் அதிகரித்து வருவது மட்டும் நன்றாக தெரிகிறது.