கமல் – கௌதமி பிரிவுக்கு பின்னணியில் இவரா..? சேச்சே.. இருக்காது..!


எந்தவித சச்சரவுகளும் இல்லாத நிலையில் திடீரென கமலை விட்டு பிரிவதாக அறிவித்து கமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துவிட்டார் கௌதமி. ஒரு காலத்தில் அதாவது, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் வெளியான காலகட்டத்தில் கௌதமியை தங்களது அண்ணியாகவே நினைக்க ஆரம்பித்தவர்கள் தான் கமல் ரசிகர்கள்..

ஆனால் காலச்சூழல் என்னென்னவோ விளையாட்டுக்களை ஆடி, பல வருடங்களுக்கு பிறகு அவர்களை ஒன்று சேர்த்தது. கமலின் குழந்தைகள் கூட கௌதமியிடம் இணக்கமாகவே இருந்தார்கள்.. அப்படி இருக்கையில் தனது மகளுக்காக பிரிகிறேன் என திடீரென கௌதமி சொல்வதை பலராலும் நம்பமுடியவில்லை.. ஏற்கவும் முடியவில்லை.

சில தினங்களுக்கு முன் கௌதமியை நமது பிரதமர் மோடி சந்தித்து பேசினார் அல்லவா..? அதன்பின்னர் தான் கௌதமி இந்த முடிவை அறிவித்துள்ளார். ஆக அரசியல் விஷயமாக ஏதோ காய் நகர்த்தப்பட்டுள்ளதாகத்தான் பலரும் நினைக்கிறார்கள்.

குறிப்பாக மோடியுடனான சந்திப்புக்குப்பிறகு தமிழக பா.ஜ.கவில் கௌதமிக்கு நல்ல பதவி ஒன்றை தர இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது கமலுடன் அவர் லிவிங் டுகெதர் முறையில் வாழ்வது, கௌதமி அரசியலுக்கு வரும்போது சலசலப்பை ஏற்படுத்தும் என்பதால் வீண் கேள்விகளை தவிர்க்கும் விதமாக, இந்த பிரிவை அறிவிக்க செய்திருக்கிறார்கள் என்றும் கமல் ரசிகர்கள் தரப்பில் பேசிக்கொள்கிறார்கள்..

ஆனால் இன்னும் சிலரோ, ஆமாம்.. பிரதமருக்கு இதுதான் வேலை பாரு.. அவர் இந்த அளவுக்கு ஒருவரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் தலையிட்டு குழப்பம் விளைவிப்பவரும் அல்ல.. சொல்லப்போனால் அந்த சந்திப்பையும் கௌதமியின் முடிவையும் ஒன்றாக இணைத்து குழப்பிக்கொள்ள கூடாது.. அது முட்டாள்தனமானது என்றும் சொல்கிறார்கள்.. உண்மை என்னவோ.. கௌதமிக்குத்தான் தெரியும்..