ஏ.ஆர்.ரகுமான் இப்படி செய்யலாமா..?


நம்ம ஊர் நட்சத்திரங்களை ஏன் கிரிக்கெட் வீரர்களை கூட இலங்கைக்கு சென்று போட்டிகளில் கலந்துகொள்வதை தமிழர்கள் விரும்புவது இல்லை. இதற்குமுன் அப்படி படப்பிடிப்புக்காக இலங்கை போன நடிகர் நடிகைகளுக்கும், இசை நிகழ்சி நடத்தப்போன கலைஞர்களும் மிகுந்த எதிர்ப்பை தமிழர்கள் தெரிவித்த சம்பவங்கள் கூட அவ்வப்போது நடந்தன.

இவையெல்லாம் தெரிந்தும் கூட தற்போது ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சி இலங்கை தலைநகர் கொழும்பில் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறதாம். அந்த நிகழ்ச்சி பற்றி இங்கே செய்தி எதுவும் இன்னும் பரவலாக வெளியாகாவிட்டாலும் கூட, இலங்கையில் உள்ளவர்கள் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடப்பதை போஸ்டர் அடித்து ஒட்டி வரவேற்றுள்ளார்களாம்.

ஏ.ஆர்.ரகுமான் மீது அளவற்ற மதிப்பு வைத்திருப்பவர்கள் நம் ரசிகர்கள். அதனால் ரகுமான் எப்படி இதற்கு ஒப்புக்கொண்டார் என அதிர்ச்சியடைந்தவர்கள், இந்த இசைநிகழ்ச்சியை ரகுமான் இலங்கைக்கு சென்று நடத்தக்கூடாது என கோரிக்கை வைக்கவும், அது புறக்கணிக்கப்படும் பட்சத்தில் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறார்களாம்.