கோடிகளில் சம்பளம் வாங்கும் ‘தல’ வெறும் ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டது ஏன் தெரியுமா…?


ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியாவில் ஆளில்லா விமான சேலன்ஞ் போட்டிகள் நடக்கும். இதை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. ஆளில்லா விமான சேலன்ஞ் போட்டிகளில் வெற்றி பெற சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. .

இந்தப் போட்டியில், யுஏவி சேலஞ்சில் ஆளில்லா விமானத்தை 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சோதனை கூடம் ஒன்றிலிருந்து நோயாளியின் ரத்த மாதிரியை எடுத்து மீண்டும் சோதனை கூடத்துக்கு ஆளில்லா விமானம் மூலம் கொண்டு வர வேண்டும். மாதிரிகளை சோதனை கூடத்திற்கு கொண்டு வருவது தான் சவாலான விஷயம் என்று எம்.ஐ.டியின் ஏரோஸ்பேஸ் துறை பொறுப்பு இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் சோதனை பைலட்டாக நடிகர் அஜீத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதை சரியாக கையாள நடிகர் அஜித்தின் நிபுணத்துவம் கைகொடுக்கும் என நம்புவதாக தகவல் அளித்துள்ளார் இயக்குனர் செந்தில்குமார்.

சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் அஜித், இங்கு ஒரு முறை வந்து பயிற்சி அளிக்க ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெறுகிறார். அதையும் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்குமாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.