பரத்தை விட்டுவிட்டு சிங்கப்பூரில் இசைவெளியீட்டு விழா நடத்திய ‘பொட்டு’ படக்குழு..!


சௌகார்பேட்டை’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கும் பேய்க்கதையையே ஆயுதமாக பயன்படுத்தியுள்ள இயக்குனர் வி.சி.வடிவுடையான் இந்தப்படத்திற்கு ‘பொட்டு’ என பெயர் வைத்து படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார்.

இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் பரத். நாயகியாக இனியா நடித்துள்ளார். பரத் இந்தப்படத்தில் பேயாக நடிக்கிறாராம். நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை, பிரமாக நடத்தியும் விட்டார் இயக்குனர் வடிவுடையான்.

ஆனால் இங்கல்ல.. கோலாலம்பூரில் வைத்து.. இந்த விழாவில் அம்ரிஷின் இன்னிசைக்கச்சேரி நடைபெற்றது.. இதெல்லாம் இருக்கட்டும். இந்தப்படத்தின் நாயகன் பரத் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பது தான் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது..

விழாவில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு பரத் ஒன்றும் பந்தா பண்ணுபவரும் அல்ல.. அவ்வளவு பிசியான நடிகரும் அல்ல.. பின் ஏன் அவர் கலந்துகொள்ளவில்லை என்கிற முணுமுணுப்பு பலரிடமும் எழுந்துள்ளதாம்.