அட கடவுளே.. சமந்தாவுக்கு ஏன் புத்தி இப்படி போகணும்..?


மீட்டருக்கு மேல் அலப்பறை கொடுக்கும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.. அவர்களில் நம்ம ஊர் அம்மணி சமந்தாவும் ஒருவர்.. வெளிநாட்டில் இருந்தோ இல்லை பாலிவுட்டில் இருந்தோ வரும் நடிகைகள் செய்யும் அக்கப்போரைத்தான் கடனே என சகித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.. ஆனால் நம்ம ஊர் பச்சை தமிழச்சியான சமந்தாவுக்கு ஏன் புத்தி இப்படி போகவேண்டும் என சோஷியல் மீடியாவில் கண்டனங்களும் கிண்டல்களும் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. அப்படி என்னதான் செய்தார் சமந்தா..?

இன்னும் சில மாதங்களில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக உள்ள நிலையில், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை சமந்தா. நேற்று முன் தினம் தன்னுடைய உள்ளாடைகளின் புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பதிவிட்டிருந்தார்.

இதனால் சமந்தாவுக்கு, சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதனால் கடுப்பான சமந்தா, அணியும் ஆடைகளை பார்த்து மதிப்பிடும் இந்த சமூகத்தை நினைத்தால் அசிங்கமாக இருக்கிறது.” என டிவிட்டரில் பதிவிட்டு இன்னும் கோபத்தை தூண்டியுள்ளார்.