“அப்ப கேட்காம இப்ப ஏன் கேட்கிறீங்க” ; சீறிய மயில் ..!


‘பாகுபலி’ படத்தில் தேவசேனா கேரக்டருக்கு இணையாக ரம்யா கிருஷ்ணனின் ‘சிவகாமி’ கேரக்டரும் புகழ்பெற்று விட்டது.. அந்த அளவுக்கு இந்தக்கதையில் இரண்டு கேரக்டர்களுக்கும் சம முக்கியத்துவம் தந்து கதையை வடிவமைத்திருந்தார் பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் வேடத்தில் முதலி ஸ்ரீதேவிதான் நடிப்பதாக இருந்து பின் அது முடியாமல் போனது என சொல்லப்பட்டு வருகிறது..

இந்த கேள்வியை நடிகை ஸ்ரீதேவியிடம் நேருக்கு நேராய் கேட்கும் வாய்ப்பு இன்று கிட்டியது.. தான் நடித்துள்ள ‘மாம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்திருந்தார் ஸ்ரீதேவி. அப்போது பாகுபலி படத்தில் நடிக்காதது குறித்து நிருபர்கள் கேட்டனர்..

அதற்கு பதிலளித்த ஸ்ரீதேவி, இப்போது வந்திருப்பது ‘பாகுபலி-2’.. ஆனால் முதல் பாகம் வெளியான நேரத்திலேயே இந்த கேள்வியை கேட்டிருக்க வேண்டும். அது முடிந்தபோன விஷயம்.. அதை இப்போது கேட்டு என்ன ஆகப் போகிறது” என் விரக்தியுடன் பதிலளித்தார்.