பரவை முனியம்மாவுக்கு உதவியவர் கிஷோர் விஷயத்தில் இப்படி நடக்கலாமா..?


கடந்த வருடம் நடிகை பரவை முனியம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டுமருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் வறுமையில் வாடுகிறார் என்கிற செய்தி வெளியானவுடன் விஷால், சரத்குமார் ஆகியோர் அடுத்தடுத்து உதவித்தொகை அளித்து பரவை முனியம்மாவின் கவலையை போக்கினர்.. இவர்களாவது நடிகர்சங்க தேர்தல் போட்டியில் இருந்ததால் போட்டிபோட்டுக்கொண்டு கொடுத்தார்கள் என்று சொல்லலாம்.

ஆனால் சம்பந்தமே இல்லாமல் திடீர் என நடிகர் தனுஷ், பரவை முனியம்மாவுக்கு 5 லட்ச ரூபாய் உதவித்தொகையாக வழங்கினார்.. ஆனால் அப்போது அப்துல் கலாம் இறந்த தினத்தன்று இவர் பிறந்தநாள் பார்ட்டி கொடுத்து கொண்டாடியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் அந்த பிரச்சனையை திசைதிருப்பவும், சரிந்த இமேஜை தூக்கி நிறுத்தவும் இப்படி ஸ்டண்ட் அடித்தார் என்றுகூட சொல்லப்பட்டது..

சரி இப்போதையை விஷயத்துக்கு வருவோம்.. கடந்த வருடம் திடீர் மாரடைப்பால் மூளைச்சவு அடைந்து மரணம் அடைந்தார் எடிட்டர் கிஷோர்.. ஆடுகளம், விசாரணை படங்களுக்கு இவர்தான் எடிட்டர். தற்போது விசாரணை படத்திற்காக மறைந்த இவருக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது..

ஆனால் இவரது 73 வயதான தந்தையோ சினிமாவுக்காக திருமணம் செய்துகொள்ளாமல் கூட தன்னை அர்ப்பணித்த தனது மகனை நடிகரும் தயாரிப்பாளருமான ஒருவர், கிஷோருக்கு சேரவேண்டிய பாக்கித்தொகையான 3.5 லட்ச ரூபாய் தராமல் இழுத்தடிக்கிறார் என வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். கிஷோர் கடைசியாக பணியாற்றி வெளியான படம் ‘விசாரணை’ தான் என்பதால் அந்தப்படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான தனுஷைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என இன்டஸ்ட்ரியில் உள்ளவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்..

அதனால் தனக்கு கொஞ்சமும் சம்பாந்தம் இல்லாத பரவை முனியம்மாவுக்கு 5 லட்ச ரூபாயை தூக்கி கொடுத்த தனுஷ், தனது படத்திற்கு உழைத்த, அதிலும் மரணமடைந்த ஒருவருக்கு சேரவேண்டிய தொகையை கொடுக்காமல் இழுத்தடிப்பது வெட்கக்கேடு என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.. பரவை முனியம்மாவுக்கு உதவியவர் கிஷோர் விஷயத்தில் இப்படி நடக்கலாமா..? இதில் உள்ள உண்மைத்தன்மையை தனுஷ் தான் விளக்கவேண்டும் என்கிறார்கள்..

இன்னொரு பக்கம் கிஷோர், பிரகாஷ்ராஜின் படங்களில் எடிட்டராக பணிபுரிந்து வந்ததாகவும் இரண்டு படங்களில் வேலை பார்த்ததற்கு கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் வரை சம்பள பாக்கி பிரகாஷ்ராஜ் தராமல இழுத்தடிக்கிறார் என்றும் கூட சொலப்பட்டு வருகிறது. காரணம் ஐவரும் அந்த நடிகர், தயாரிப்பாளர் என்கிற லிஸ்ட்டில் தானே வருகிறார் என விளக்கம் சொல்கிறார்கள்..