நயன்தாரா பச்சோந்தியாக மாற கரணம் இதுதான்..!


தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக படத்தின் பிரஸ்மீட், இசைவெளியீடு, பிரிமியர் ஷோ, டிவி புரமோஷன் என எதிலும் தலைகாட்ட மாட்டார் நயன்தாரா. இதனால் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குனர்களின் கோபத்திற்கும் ஆளானார்.. ஆனாலும் அவர்தான் வேண்டுமென விரும்புவர்கள் அவரது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு அவரை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்..

இந்தநிலையில் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக சுதந்திர தினத்தன்று சேனல் ஒன்றின் சிறப்பு நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துகொண்டார். அதுமட்டுமல்ல வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சன் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார் நயன்தாரா. ஆஹா.. நயன்தாரா மாறிவிட்டார் என உடனே தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள்.

தற்போது அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப்படத்தை தயாரித்துள்ளது நயன்தாராவின் மேனேஜர் தான்.. இன்னொருவகையில் நயன்தாராவும் இதன் பினாமி தயாரிப்பாளர் தான். அதனால் இந்த விநாயகர் தின சிறப்பு நிகழ்ச்சியில் அறம் படம் பற்றி ரசிகர்களுக்காக பல செய்திகளை பகிர்ந்துகொள்ள இருக்கிறாராம் நயன்தாரா. இப்போது புரிகிறதா நயன்தொரா பச்சோந்தி மாதிரி நிறம் மாறிய காரணம்..?