தம்பி பட இசைவெளியீட்டு விழாவை இயக்குனர் விஷ்ணுவர்தன் தவிர்க்க நினைத்தது ஏன்..?


‘கழுகு’ கிருஷ்ணா நடித்துள்ள ‘யாக்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றுமுன் தினம் நடைபெற்றது.. இதில் கிருஷ்ணாவின் அண்ணனான இயக்குனர் விஷ்ணுவர்த்தனும் கலந்துகொண்டார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் கலந்துகொண்டார்.. முதில் இந்த விழாவிற்கு வராமல் எப்படியாவது எஸ்கேப் ஆகிவிடவேண்டும் என நினைத்தாராம் விஷ்ணுவர்தன்.

காரணம் இந்த விழாவுக்கு வரும் யுவன் சங்கர் ராஜாவை சந்திக்காமல் தப்பிக்கலாமே என்பதற்காகத்தானாம்… யுவனை பார்த்து இவர் ஏன் பயப்பட வேண்டும்.. இருவரும் திக் பிரண்ட்ஸ் ஆகிற்றே..? என்றால் காரணம் இருக்கிறது என விஷ்ணுவர்தனே சொல்கிறார்..

அதாவது யுவன் சங்கர் ராஜா சொந்தமாக யுவன் புரொடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.. அதில் ஒரு படம் பண்ணித்தரும்படி விஷ்ணுவர்தனை கீடிருந்தராம் யுவன்.. ஆனால் சில மாதங்களாகியும் கூட விஷ்ணுவர்தனோ கதை எதையும் தயார் பண்ணவில்லையாம்.. இந்த விழாவில் பார்த்தால் யுவன் காரணம் கேட்பாரே, அதற்கு என்ன பதில் சொல்வது என்றுதான் இந்த விழாவில் கலந்துகொள்ளாமல் எஸ்கேப் ஆக நினைத்தாராம் விஷ்ணுவர்தன்.