ஆடியோ ரிலீஸ் அன்று அரெஸ்ட் ஆகிறாரா சிம்பு..?

நீதிமன்ற உத்தரவு என்பதை தனது கால்ஷீட் போல நினைத்துக்கொண்டு தொடர்ந்து தலைமறைவு ஆட்டம் காட்டி வருகிறார் சிம்பு.. நீதிமன்றம் ஆஜராக சொல்லும் தேதியில் எல்லாம் தொடர்ந்து வாய்தா மேல் வாய்தா  கேட்டு தனக்கு பிற்காலத்தில் அரசியல்வாதி ஆகும் தகுதி உள்ளதை சூசகமாக உணர்த்தி வருகிறார் சிம்பு..

ஜன-29ல் அவர் சென்னையிலும் கோவையிலும் வழக்கு பதியப்பட்ட காவல் நிலையங்களில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டிருந்தது.. ஆனால் அதற்கு தடைகேட்டு மனு போட்டுவிட்டு, வழக்கம்போல விட்டேத்தியாகவே இருந்து வருகிறார் சிம்பு..

இதனால் கோபத்தில் உள்ள காவல்துறையினர் பிடிவாரன்ட் வாங்கி, வரும் பிப்-3ஆம் தேதி நடைபெறவுள்ள அவரது ‘இது நம்ம ஆளு’இசைவெளியீட்டு விழாவில் வைத்து கைது பண்ண முடிவுசெய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அன்றுதான் சிம்புவின் பிறந்தநாளும் கூட.. அன்று எப்படியும் அவர் வெளியே வந்துதான் ஆகவேண்டும் என்பதால் அதற்கு தயாராக இருக்கிறதாம் காவல்துறை..