நன்றிக்கடன் தீர்ப்பதன் மூலம் இயக்குனரின் கடன் பிரச்சனையை தீர்ப்பாரா விஜய்..?


நடிப்பதற்காக சினிமாவுக்கு வந்தவர் தான் எஸ்.ஜே.சூர்யா.. விதிவசத்தால் இயக்குனராக மாறிவிட்டார்.. ஆனாலும் தனது முழுத்திறமையையும் கொட்டி, அஜித்துக்கு ஒரு ஹிட்டும் விஜய்க்கு ஒரு ஹிட்டும் கொடுத்தார் எஸ்.ஜே.சூர்யா.. இதில் விஜய்க்கு கொடுத்த ஹிட்டுதான் மிக சிறப்பானது. விலை உயர்ந்தது.

காரணம் தொடர்ச்சியாக நான்கைந்து தோல்விபடங்களை தந்து மிகுந்த மன ழுத்ததில் விஜய் இருந்த நேரத்தில் தான் அவரை வைத்து குஷி படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக, விஜய்யின் மார்க்கெட் மீண்டும் ஸ்டெடி ஆனது. அந்த நேரத்தில் எஸ்.ஜே.சூர்யா பற்றி எல்லோரிடமும் உருகி உருகி பேசினார் விஜய்.

ஆனால் எஸ்.ஜே.சூர்யாவின் சமீபத்திய நிலையோ பரிதாபம் தான் என்கிறார்கள்.. இசை படத்தை எடுத்த விதத்தில் கடன் பிரச்சனையால் தவித்துவரும் எஸ்.ஜே.சூர்யா அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் கூட, அதில் வரும் வருமானம் வட்டி கட்டுவதற்கே சரியாக போய்விடுகிறதாம்.

இந்தநிலையில் கடந்த வருடத்தில் இருந்தே விஜய்யை வைத்து ஒரு படத்தை சூர்யா இயக்கபோவதாக செய்திகள் வந்தன அல்லவா.? அதை கசியவிட்டதன் பின்னணியில் சூர்யாதான் இருக்கிறாராம். விஜய் எப்படியாவது கால்ஷீட் தந்தாள் தனது கடன் முழுவதையும் அடைத்து லைப்பில் செட்டிலாகி விடலாம் என நினைக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா. அஜித் செய்யமாட்டார் என்பது தெரியும்.. ஆனால் விஜய்யாவது செய்வாரா..?