தமன்னாவின் ஓரவஞ்சனைக்கு முடிவுகட்டுவாரா விஷால்..?


தமன்னா நல்ல அழகான திறமையான நடிகை தான்.. ஷூட்டிங்ஸ்பாட்டில் அனைவரிடமும் மரியாதையுடன் நடந்துகொள்ளும் நடிகைதான். ஆனால் தான் நடிக்கும் தமிழ்ப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைத்தால் மட்டும் டிமிக்கி கொடுத்துவிட்டு போய்விடுகிறார்.. இதனால் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இதுபற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்..

அப்படியானால் கார்த்தியுடன் நடித்த ‘தோழா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு வந்தாரே என நீங்கள் கேட்கலாம்.. ஆம்.. ஏன் வந்தார்..? படத்தை இயக்கியது தெலுங்கு இயக்குனர்.. அதுமட்டுமல்ல, தெலுங்கின் முன்னணி நடிகரான நாகர்ஜூனாவே அந்த விழாவில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்ட பிறகு தான் மட்டும் வராமல் இருந்தால் அது வேறுமாதிரியான விவகாரம் ஆகிவிடும் என நினைத்து வந்திருக்கலாம்..

இல்லை கார்த்தியுடனான பழைய நட்பில் கூட வந்திருக்கலாம். அதேசமயம் விஜய்சேதுபதியுடன் நடித்த ‘தர்மதுரை’ படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் தலைகாட்டவில்லையே.. ஏன்..? தமிழில் மட்டும் இப்படி புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்க்கும் தமன்னா, தெலுங்கில் முதல் ஆளாக ஆஜர் ஆகிவிடுகிறார்.

ஆனால் விஷால் இந்த விஷயத்தில் தமன்னாவிற்கு கடிவாளம் போடுவார் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர்.. காரணம் விஷாலுடன் இணைந்து கத்திச்சண்டை படத்தில் நடித்துவருகிறார் தமன்னா.. விஷால் நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருப்பதால், நடிகர், நடிகைகள் தங்களது பட விழாக்களில் பங்கேற்கவேண்டும் என்பதில் கண்டிப்பு காட்ட நினைப்பவர்.

அதனால் தனது பட நாயகியே அந்த விஷயத்தில் தனக்கு எதிராக செயல்படுவதை அவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.. ஆக, ‘கத்திச்சண்டை’ புரமோஷன் நிகழ்ச்சிகளில் தமன்னா கட்டாயம் கலந்துகொண்டே ஆகவேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.