“டயலாக்கை ஒழுங்கா எழுது” ; இயக்குனரை அதட்டிய சரண்யா பொன்வண்ணன்..!


விஷ்ணு விஷால் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கதாநாயகன்’. இந்தப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சின்னச்சின்ன காமெடி கேரக்டர்களில் நடித்துவந்த முருகானந்தம் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் சரண்யாவுக்கென சில வசனங்களை எழுதியிருந்த முருகானந்தம் அவரிடம் ஒரு வசனத்தை சொன்னாராம்.. அதை படித்து பார்த்த சரண்யா, அதில் லாஜிக்காக ஒரு சந்தேகத்தை எழுப்பினாராம் . உடனே இயக்குனரும் அட ஆமாம்ல என அசடு வழிந்தாராம். அதற்கு சரண்யா டயலாக்கை ஒழுங்கா எழுதுன்னு அட்வைஸ் பண்ணினாராம்.

அதனால் சரண்யா சம்பந்தப்பட்ட வசனங்களில் அடிக்கடி அவரிடம் சந்தேகம் கேட்டுக்கொண்ட முருகானந்தம், மேடம் இந்த விஷ்ணு ஸார் பேசுற டயலாக்கில் என ஆரம்பித்தாராம். அதற்கு “அட.. அவங்க டயலாக் எனக்கெதுக்குப்பா.. என் டயலாக்கை மட்டும் எங்கிட்ட சொலுங்க..” என தடாலடியாக கூறிவிட்டாராம்.