லைவ் டெலிகாஸ்ட்டில் காஜல் அகர்வாலுக்கு நேர்ந்த பயங்கரம்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘லைவ் டெலிகாஸ்ட்’. காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை (பிப்-12ஆம் தேதி) உலகெங்கும் ஒளிபரப்பாக உள்ளது. மாந்த்ரீக சக்திகள் நிறைந்த, ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் தொலைக்காட்சி தொடர் ஒன்று படமாக்கப்படும்போது ஏற்படும் வினோத அனுபவங்களின் தொகுப்பே “லைவ் டெலிகாஸ்ட்’.

இந்தப்படத்தில் காஜல் அகர்வாலுடன், வைபவ் ரெட்டி, “கயல்” ஆனந்தி, ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம், மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்ததொடரில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார் நாயகி காஜல் அகர்வால்..

“நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்து எடுத்த இடம் மிகமிக பொருத்தமானது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது. மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீடு மட்டும் அங்கு தனித்து இருந்தது.. படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயே தான் நடந்தது. படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம்  தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்க கூட முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரமை என்னை அச்சுறுத்திக்கொண்டே இருந்தது.. இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது. தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு உண்டாகும்” என்று திகில் மாறா உணர்வுடன் கூறியுள்ளார் காஜல் அகர்வால்.