விஜய்வசந்த் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “அச்சமின்றி”

டிரிபிள் வி ரெகார்ட்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்த “என்னமோ நடக்குது” படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தயாரிக்கும் படம் “அச்சமின்றி”.

விஜய்வசந்த் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் சமுத்திரகனி, கருணாஸ், ராதாரவி, வித்யா, சரண்யா, தேவதர்ஷினி, சண்முகசுந்தரம், கும்கி அஸ்வின், ரோகினி, தலைவாசல் விஜய், இவர்களுடன் வில்லன்களாக பரத்ரெட்டி, ஜெயகுமார் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – A.வெங்கடேஷ்

இசை – பிரேம்ஜி அமரன்

பாடல்கள் – யுகபாரதி

கலை – சரவணன்

எடிட்டிங் – பிரவீன்.K.L

ஸ்டன்ட் – கணேஷ் குமார்

நடனம் – விஜி சதீஷ்

தயாரிப்பு மேற்பார்வை – சொக்கலிங்கம்

வசனத்தை ராதாகிருஷ்ணன் எழுதி இருக்கிறார்.

தயாரிப்பு – டிரிபிள் வி ரெகார்ட்ஸ் V.வினோத்குமார்.

கதை, திரைக்கதை, இயக்கம் ராஜபாண்டி..

படம் பற்றி இயக்குனர் ராஜபாண்டி கூறியதாவது…

“ என்னமோ நடக்குது “ படம் எப்படி கதையோடு கமர்ஷியல் கலந்து சொல்லப் பட்டதோ அது மாதிரி “ அச்சமின்றி “ படமும் அழுத்தமான கதையை உள்ளடக்கியது.செம்ம ஸ்பீடான திரைக்கதையாக படம் பரபரப்பாக இருக்கும்.

சமீபத்தில் விஜய்வசந்த் – சிருஷ்டி டாங்கே பங்கேற்ற

“உன்னை பார்த்ததால

பசியே இல்ல

படுத்தாலும் கூட

விழி மூடல”

என்ற பாடல் காட்சி பொள்ளாச்சியில் படமாக்கப் பட்டது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.