ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இணையும் கார்த்தி-ஜி.வி. பிரகாஷ் கூட்டணி


தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் கார்த்தி. நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான கைதி, தம்பி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கைதி படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து, இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படத்திற்கு தான் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த கொம்பன் சகுனி ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கார்த்தி ஜிவி பிரகாஷ் கூட்டணி திரைப்படத்தின் மூலம் இணைய உள்ளது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.