சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த அனிருத்!


சூப்பர்ஸ்டாரின் தர்பார் படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு வெளியான “சும்மா கிழி” என்ற டைட்டில் சாங் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தது. யூடியூப்பிலும் சாதனை படைத்து வருகிறது.

சூப்பர்ஸ்டாரின் ஆஸ்தான பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா 7ம் தேதி சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் முக்கியமான பாடல் ஒன்றை 3 திருநங்கைகள் பாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்பைஸ் கேர்ள்ஸ் என்னும் இசைக்குழுவை சார்ந்த சந்திரமுகி, ரக்சனா, பிரியா ஆகியோர் இந்த சிறப்பு பாடலை பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

தர்பார் படத்தின் மூலம் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.