மீண்டும் இணைய உள்ள விஷால்-ஆர்யா கூட்டணி!


விஷால் மற்றும் ஆர்யா ஏற்கனவே இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அத்திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமின்றி நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. அதன்பின் இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை.

விஷால் தற்போது ஆக்சன் திரைப்படத்திற்கு பிறகு சக்கரம் மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு ஆனந்த் சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் விஷால். இதில் நாயகியாக ரீத்து வர்மாவும் வில்லனாக ஆர்யாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அவன் இவன் திரைப்படத்திற்கு பிறகு விஷாலும் ஆர்யாவும் இணைந்து மீண்டும் புதிய படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்க உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.