ஜுலை 10ம் தேதி வெளியாகும் “பாகுபலி”

இந்திய திரைப்பட வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், வெற்றி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்குத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் “பாகுபலி”.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மிக அதிகமான திரையரங்குகளில் இப்படம் ஜுலை 10ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை சமீபத்தில் தணிக்கை செய்த தணிக்கை குழுவினர், பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்தையும், மிரள வைக்கும் காட்சியமைப்பையும் பார்த்து வியந்தார்களாம்.

சிறப்பம்சமிக்க பாகுபலி படத்தை தணிக்கை செய்ததற்க்கு மிகவும் பெருமிதம் கொள்வதாகவும், பாகுபலி பட தணிக்கை சான்றிதழில் தங்களின் பெயர் இடம்பெருவது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளனராம்.

வெற்றி பட தயாரிப்பாளரான கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரின் நிறுவனத்திற்கு இப்படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று வாழ்த்தினார்களாம்.

பொதுவாகவே எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த பாகுபலி திரைப்படத்திற்கு, தணிக்கை சான்றிதழ் குழுவினர் அளித்த பாராட்டு எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.