விஷாலின் துப்பறிவாளன்-2 – முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு


கடந்த 2017-ம் வருடம் விஷால் துப்பறியும் வேடத்தில் நடித்த திரைப்படம் துப்பறிவாளன். இப்படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது மிஷ்கின்-விஷால் கூட்டணியில் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. படத்தின் நாயகியாக ஆஷியா நடிக்கிறார்.

மேலும் நாசர், ரகுமான், பிரசன்னா, கவுதமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

துப்பறிவாளன்-2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, அடுத்த கட்டமாக இந்தியாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை விஷால் பிலிம் பேக்ட்ரி சார்பில் விஷால் தயாரித்து வருகிறார்.