தர்பார் 4 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகள் தமிழக அரசு அனுமதி!


ரஜினி நடித்த தர்பார் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நாளை வெளியாகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை, என்று சர்ச்சை எழுந்தது. அரசியல் ரீதியிலான காரணங்கள், இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சிக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 9, 10 13 மற்றும் 14 ஆகிய நான்கு நாட்கள், தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில், சிறப்புக் காட்சிகளை வெளியிடலாம், என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அதிகாலை சிறப்புக் காட்சி நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது ரஜினி ரசிகர்களுக்கு இந்த வருடப் பொங்கல் இனிப்பாக அமைந்திருக்கிறது.