“என் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனையா..?” ; தெலுங்கு சேனல் தொகுப்பாளினியை அலறவிட்ட தனுஷ்..!


தனுஷ் பற்றி கடந்த சில மாதமாகவே சர்ச்சை செய்திகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.. மீடியாக்களில் செய்தி வடிவில் வெளியானாலும் கூட, தனுஷிடம் வாய்மொழியாக இதுபற்றி யாரும் கேட்பதில்லை.. கேட்பதற்கு பயம் என ஒன்றுமில்லை. அப்படி கேட்பது இங்கிதமும் அல்ல. பத்திரிக்கை தர்மமும் அல்ல என தனுஷை சந்தித்தாலும் சர்ச்சை விஷயங்களை கேட்பதில்லை.

ஆனால் தெலுங்கு சேனல் ஒன்றின் தொகுப்பாளினி ஒருவர் இந்த இங்கிதம் எதுவும் இல்லாமல் செய்திகளில் படித்த விபரங்களை வைத்து தனுஷிடம் கேள்விகள் கேட்டதும், அதற்கு தனுஷ் பேட்டியின் ஆரம்பத்திலேயே மைக்கை பிடுங்கி எறிந்துவிட்டு வெளியேறியதும் பரபரப்பை கிளப்பியுள்ளது..

இத்தனைக்கும் அது விரைவில் வெளியாக இருக்கும் ‘வி.ஐ.பி-2’வுக்கான புரமோஷன் பேட்டி.. அதில் தனுஷை நேர்காணல் செய்த பெண் தொகுப்பாளினி, ‘வி.ஐ.பி-2’ படம் குறித்த தகவல்களை கேட்பதை விடுத்து, தனுஷ் பற்றி வெளியான சர்ச்சை வீடியோக்கள், தனுஷின் குடும்ப வாழ்க்கை மற்றும் சமீபத்திய தெலுங்கு சினிமாவின் போதைப்பொருள் சர்ச்சை குறித்தெல்லாம் பேட்டியின் ஆரம்பத்திலேயே சம்பந்தமில்லாமல் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார் அந்த தொகுப்பாளினி..

அதனால்தான் தனுஷ், கோபமாக, அதேசமயம் புன்னகை மாறாத முகத்துடன் படக்கென வெளியேறினார். அதன்பின் அந்த சேனல் நிர்வாகம் தனுஷிடம் மன்னிப்பு கேட்டு, மீண்டும் அழைத்து வந்தது.. பின் அந்த பேட்டி முழுதும் தனுஷ் ஒருவித இறுக்கத்துடனேயே பதில் அளித்தார் தனுஷ்.