பட்ஜெட்டை குறைத்து ஜெய்யை டம்மியாக்கும் இயக்குனர்..!

வலியவன் படம் தன்னை இவ்வளவு தூரம் மெலியவைக்கும் என ஜெய் கனவில் கூட நினைக்கவில்லை.. அவருக்கென ஒரு குறிப்பிட்ட மார்க்கெட் இருந்தது. அந்த மார்க்கெட்டை தனது ‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஏற்றிவைத்த இயக்குனர் சரவணனே, இப்போது அதை வலியவன் அடித்து உடைத்துவிட்டார்..

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே படத்தை பார்த்து இது தேறாது என முடிவு செய்த ஜெய்க்கு வந்த அந்த கோபம் தான், அப்போது நடைபெற்ற ஆடியோ ரிலீஸ், பத்திரிகையாளர் சந்திப்பு எதிலும் அவரை கலந்துகொள்ளவிடாமல் தடைபோட்டது.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும என்று சொல்வதுபோல, இப்போது வலியவனின் தோல்வியால், தற்போது ஜெய்யை வைத்து படம் இயக்கிவரும் இயக்குனர் திரு, தனது படத்தின் பட்ஜெட்டை வெகுவாக சுருக்கிவிட்டாராம்..

அதுமட்டுமல்ல.. படத்தில் உடன் நடிக்கும் சமுத்திரக்கனிக்கும் டாப்சிக்கும் கூடுதல் முக்கியத்துவம் தந்து ஜெய்யை டம்மியாக்கிவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. நவீன சரஸ்வதி சபதம், திருமணம் எனும் நிக்கா, வடகறி, வலியவன் படங்களின் தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் ஜெய், அதிலிருந்து மீண்டு(ம்) வந்தால் அது உலக அதிசயம் தான்.