ஹீரோக்கள் டூயட் பாடுவதை பார்த்து வயிறெரியும் சத்யராஜ்..!

ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் சினிமாவுக்குள் நுழைந்தவர் சத்யராஜ். கிட்டத்தட்ட எழுபத்தைந்து படங்களில் எஸ் பாஸ் என சொல்லும் அடியாளாக, அப்புறம் கதாநாயகியை கற்பழிக்கும் வில்லனாக, பின்னர் குணச்சித்திர நடிகனாக, நடித்தபின் தான் அவருக்கு ஹீரோ புரமோஷன் கிடைத்தது. அதன்பின் ஹீரோவாக 125 படங்களில் நடித்துவிட்டார்.

ஒருகட்டத்தில் ஹீரோ போஸ்ட்டிங்கில் இருந்து ரிட்டையர்டு ஆகித்தானே ஆகவேண்டும். அப்படி ஆனபின் அமைதியாக இருந்தவருக்கு சில இயக்குனர்கள் தங்களது படங்களில் முக்கியத்துவம் உள்ள வேடம் என்று அழைத்துச்சென்று நடிக்க வைத்தர்கள்.. அவர்கள் சொன்னபடி படத்தில் அவருக்கும் முக்கியத்துவம் இருக்கத்தான் செய்தது.

தலைவா, ராஜாராணி, இப்போது வெளியான பாகுபலி உட்பட அவருக்கு பெயர் சொல்லும்படியான கேரக்டர்கள் தான் கிடைத்துள்ளன. ஆனாலும் அவரது வருத்தம் என்னவென்றால், தான் ஆரம்பத்தில் இருந்தே குணச்சித்திர நடிகனாகவே இருந்திருந்தால் தனக்கு ஒன்றும் தோன்றியிருக்காது என்றும் இடையில் கதாநாயகனாக மாறி குஷ்பூ, கௌதமி, பானுப்ரியா என பல ஹீரோயின்களுடன் டூயட் பாடியதால் இப்போது கூட கதாநாயகன் என்கிற நினைப்ப்பை விட்டு முழுதுமாக வரமுடியவில்லையாம்.

என்னதான் முக்கியமான வேடம் என்றாலும் கூட ஹீரோயினுடன் டூயட் பாடும் சான்ஸ் ஹீரோவுக்குத்தானே கிடைக்கிறது. அதனால் இந்த ஹீரோக்கள் டூயட் பாடும் காட்சிகளை பார்த்தால் வயித்தெரிச்சலாக இருக்கிறது என்கிறார் சத்யராஜ். இது ஏதோ நாமே இட்டுக்கட்டி சொன்ன்னது அல்ல.. ‘நைட் ஷோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் தன் வாயால் தானே புலம்பியதுதான்.