மருமகன் தப்பு பண்ணியிருந்தாலும் தூக்கு தானாம் – ஒய்.ஜி.மகேந்திரன் அதிரடி..!

மழைவெள்ள சோகத்தை மறக்கடிக்கும் அளவுக்கு சிம்புவின் வக்கிரமான ‘பீப்’ சாங் வெளியாகி அனைவரின் கண்டனத்துக்கும் ஆளாகி இருக்கிறது.. இந்தப்பாட்டை எழுதியது, பாடியது சிம்புதான் என்பது உறுதியாகிவிட்டது… ஆனால் அவரது தந்தை டி.ஆரோ மகனை காப்பாற்ற ஏதேதோ பேசி குழப்புகிறார்..

இன்னொரு பக்கம் அனிருத் தான் இந்த கேவலமான பாடலுக்கு இசையமைத்துள்ளார் என சிம்பு, டி.ஆர் இருவரும் சொன்னாலும் கூட, அனிருத் தனக்கு இதில் சம்பந்தம் இல்லை என மறுத்துள்ளார். அனிருத்தின் மாமாவான ஒய்.ஜி.மகேந்திரன் இதுபற்றி சொல்லும்போது “அனிருத் இதற்கு இசையமைக்கலைன்னு சொல்றான்.. இந்த தப்பை பண்ணினது யாராக இருந்தாலும் அதற்கு யார் உடந்தையாக இருந்தாலும் அவர்களை தூக்கில் போடணும்” என ஆவேசமாக கூறியுள்ளாராம்.