“பாபிசிம்ஹாவுக்கு முதல் சம்பளம் கொடுத்தவன் நான்” ; டென்ஷனான சித்தார்த்..!


சித்தார்த் எளிதில் உணர்ச்சி வசப்படுபவரே தவிர பெரும்பாலும் நிதானம் இழக்காதவர்.. கோபப்படாதவர் தான்.. ஆனால் அப்படிப்பட்டவரையே இன்று நடைபெற்ற ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தபோது, கோபப்படவைத்துவிட்டது ஒரு நிருபரின் கேள்வி.

அப்படி என்ன கேட்டார் அந்த நிருபர்..? “பொதுவாக குறும்பட இயக்குனர்கள் என்றாலே பாபி சிம்ஹா, விஜய்சேதுபதி ஆகியோரிடம் தானே போவார்கள்.. ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தி உங்களை தேடி வந்தது எப்படி..?’’ இதுதான் அந்த கேள்வி.. உடனே சித்தார்த்துக்கு வந்ததே கோபம்..

“என்ன சொன்னீங்க பாபிசிம்ஹாவை தேடிப்போறாங்கன்னா..? குறும்பட டைரக்டரோட முதல் படத்துல நான் நடிச்சப்ப அவருக்கு சம்பளம் கொடுத்து அதுல ஒரு சின்ன கேரக்டர்ல நடிக்க வச்சவன் நான். எனக்கு பின்னாடி தான் பாபி சிம்ஹா, விஜய்சேதுபதி எல்லாம் குறும்பட இயக்குனர்கள் கிட்ட ஒர்க் பண்ண ஆரம்பிச்சாங்க” என பொங்கிவிட்டார்..

அய்யா நிருபர்களே.. அவர் சொல்றது உண்மை தானே..? அது நமக்கும் தெரியும் தானே..? அப்புறம் என் இதுபோன்ற தேவையற்ற கேள்விகளை கேட்டு விழாவின் இனிய மூடை கெடுக்கிறீர்கள் என சக நிருபர்கள் சிலர் பேசிக்கொண்டதை கேட்கவும் முடிந்தது.