தெறி படத்தால் மூடப்பட்ட 11 தியேட்டர்கள்!

செங்கல்பட்டு ஏரியாவிலிருக்கும் 11 தியேட்டர்களுக்கு எந்த படமும் கொடுக்க கூடாது. அப்படி அவர்களுக்கு கொடுத்தால் நாங்கள் அந்த படங்களை திரையிட மாட்டோம் என செங்கல்பட்டு ஏரியாவில் பல தியேட்டர்களை தங்கள் கையில் வைத்துள்ளவர்கள் கூட்டாக சேர்ந்து விநியோகஸ்தர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

தெறி படம் வெளியான நேரத்தில், செங்கல்பட்டு ஏரியாவில் அந்த படத்தை திரையிட மாட்டோம் என்று சில தியேட்டர்காரர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.அந்த நேரத்தில், “நாங்க தெறிக்கு சப்போர்ட்” என்று 11 தியேட்டர்காரர்கள் படத்தை தங்கள் தியேட்டர்களில் வெளியிட்டார்கள். அவர்களுக்கு இனி எந்த படமும் கொடுக்கக் கூடாது என்று விநியோகஸ்தர்களை தடுத்து, சம்பந்தப்பட்ட தியேட்டர்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டது செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாளர்கள் கலககுழு.

எங்கள் தொழிலை மீட்டுக் கொடுக்கணும். தடியெடுத்தவர்கள் எல்லாரும் தண்டல்காரர்கள் ஆகி பஞ்சாயத்து செய்வதையும் தடுக்கணும் என்ற கூக்குரலோடு தமிழக அரசிடம் முறையிட்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட தியேட்டர்காரர்கள். தெறி படத்தால் பாதிக்கப்பட்ட இந்த தியேட்டர்களுக்கு கபாலி படத்தை கொடுத்து தாணு அவர்கள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் இவர்கள்..

அவர்களின் கோரிக்கைகள் ..