ரஜினியிடம் பிடிவாதம் பிடித்து காரியம் சாதித்த ரஞ்சித்..!


பொதுவாக ரஜினிகாந்த் இரவு நேர ஷுட்டிங்கை தர்மதுரை படத்துடனேயே நிறுத்திவிட்டாராம். அதற்குப் பிறகு இரவு நேர ஷுட்டிங் எதிலும் அவர் பங்கேற்றதில்லையாம். அதோடு அவர் நடிக்கும் படங்களுக்கு டப்பிங் பேசும் போது அந்தந்த பட இயக்குனர்களை அவர் அனுமதித்ததில்லையாம். இருந்தாலும் தளபதி படத்தின் போது மணிரத்னம் சண்டை போட்டு ரஜினி, டப்பிங் பேசும் போது உடனிருந்திருக்கிறார்.

ஆனால் கபாலி படம் ஆரம்பித்ததில் இருந்தே அனைத்து கட்டுப்பாடுகளும் ரஞ்சித்தின் கைக்கு வந்துவிட்டன. அதனால், கபாலி படத்திற்காக இரவு முழுவதும் கண் விழித்திருந்து நடித்துக் கொடுத்திருக்கிறார் ரஜினி. அதேபோல முதல்நாள் ரஜினி பேசிய டப்பிங் ரஞ்சித்துக்கு திருப்தி தரவில்லையாம். அதனை ரஜினியிடமே நேரடியாக ரஞ்சித் சொல்லிவிட, அதன்பிறகு ரஞ்சித்தின் இன்ஸ்ட்ரக்ஷன் படி மிக அருமையாக டப்பிங் பேசி முடித்தாராம் சூப்பர்ஸ்டார்.

கடைசி நாள் டப்பிங் அன்று, சரியில்லை என பீல் பண்ணிய முதல்நாள் டப்பிங்கையும் ரஜினியை பேசவைத்துவிட்டாராம் ரஞ்சித். இது அனைத்துமே படம் நன்றாக வரவேண்டும் என்கிற ரஞ்சித்தின் மெனக்கெடல் தான் என்பதை உணர்ந்துகொண்ட ரஜினி இதை சந்தோஷமாகவே செய்தாராம்.