தென்னிந்தியாவில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் ‘க்ளோபல் கிட்ஸ் அபாகஸ்’ எனும் கம்பெனி கடந்த 15 வருடங்களாக அபாகஸ் பயிற்சியை அளித்து வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த கம்பெனி கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் தனது கிளைகளை கொண்டது.
தென்னிந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வருடா வருடம் மாணவர்களுக்கு அபாகஸ் போட்டி நடத்தி அதில் சிறந்த மாணவர்களுக்கு பரிசளித்து வருகின்றனர்.
2016-2017 வருடத்திற்கான ‘அபாகஸ் போட்டி’ தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டது. 10000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த 1200 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கடந்த சனிக்கிழமை 11 மார்ச் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த இந்த விழாவில் ‘க்ளோபல் கிட்ஸ் அபாகஸ்’ நிர்வாகிகளான P.சுபப்ரியா, S.பார்த்திபன் மற்றும் V.N.மதன் ஆகியோர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் APJ. அப்துல் கலாமின் பேரன் APJMJ. ஷேக் தாவுத் மற்றும் சமூக ஆர்வலர் அப்துல் கனி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.