‘பாகுபலி-2’வை பாகிஸ்தானில் வெளியிட வேண்டுமானால் இப்படித்தான் செய்தாகணுமா..?


‘பாகுபலி-2’ படம் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளதை தொடர்ந்து அந்தப்படத்தை பாகிஸ்தானிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பாகிஸ்தானில் இருந்து நிறைய ரசிகர்கள் பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள்…

ஆனால் இதற்கு முன்பு சில பாலிவுட் படங்களை பாகிஸ்தானில் திரையிட எதிர்ப்பு கிளம்பியதால், இந்தியில் ‘பாகுபலி-2’வை ரிலீஸ் செய்த கரண் ஜோகர், இந்தப்படத்தை பாகிஸ்தானில் ரிலீஸ் பண்ணுவது குறித்து இம்மியளவும் வாய்திறக்கவில்லை.. அதில் ஆர்வம் காட்டவும் இல்லை.

ஆனால் இந்தப்படத்தை கரண் ஜோஹரே பாகிஸ்தானில் ரிலீஸ் செய்ய முயற்சி எடுத்தாலும், இந்துத்துவ பெருமைகளை பற்றி தங்கள் நாட்டில் அதிகம் பேச விடாத பாகிஸ்தான் இந்தப்படத்தை திரையிட அனுமதிக்காது என்றும் டெக்னிக்கலாக சினிமா துறையில் இந்தியா முன்னேறி வருவதை அது விரும்பாது என்றும் பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

இன்னும் ஒருபடி மேலாக ஒரு ரசிகர், ஒருவேளை ‘பாகுபலி-2’ படத்தை ‘பாபு அலி-2’ என மாற்றினால் தான் பாகிஸ்தானில் ரிலீஸ் செய்ய விடுவார்களோ என தானே ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் உருவாக்கி அதை சோஷியல் மீடியாவில் உலாவ விட்டுள்ளார்.. அதில் பிரபாசை தாடியுடனும், அனுஷ்காவை பர்தா அணிந்தபடியும் சித்தரித்துள்ளார் அந்த ரசிகர். அந்த போஸ்டரும் செம வைரல் ஆகி வருகிறது.