கமலுக்கு சம்பளம் பேசும்போது கூடவே நின்றாரா விசு..?


நடிகர் கமல் அரசியலுக்கு வருவதாக அறிவித்தாலும் அறிவித்தார்.. நண்டு சுண்டக்காய்கள் எல்லாம் அவரை எதிர்த்து குரல் கொடுத்து தங்களது இருப்பை காட்டிக்கொள்ள முண்டியடிக்கின்றனர்.. அதில் ஒருவர வாய்ஜால வித்தையில் கில்லாடியான நடிகர் விசு.. இவர் கமல் பற்றி சமீபத்தில் நக்கலாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதில், “ஒழுங்கா வரி கட்டறீங்களாமே. அப்படியா? சூப்பர். புக்குல காட்டற வரவுக்குத் தானே? அதாவது 100 ரூபாய் வரும்படின்னா, அதை 40 ரூபாய்ன்னு புக்குல காட்டி, அந்த 40 ரூபாய்க்கு ஒழங்கா வரி கட்டறீங்க. அதானே. அப்ப மீதி 60 ரூபாய் கருப்பு தானே. புரியும்படியா சொல்லுங்க.” என தான் ஏதோ மேதாவித்தனமாக கேட்டது போல நினைத்துக்கொண்டு அறிக்கை விட்டுள்ளார்.

பொதுவாக திரையுலக பிரபலங்கள் வாங்கும் சம்பளம் என்பது நடிகர், தயாரிப்பாளர் என இருவருக்குள் நிகழ்வது.. இதில் கருப்பு பணம் புழங்குகிறது தான். இளைஎன்று சொல்வதற்கில்லை. ஆனால் கருப்பு பணம் வாங்குவதில்லை என, வாங்கும் பணத்திற்கு முறையாக வரி கட்டி வரும் ஒருவர் மீது சேற்றை வரை இறைப்பது விசு போன்ற கோமாளிகளுக்கு ரொம்ப ஈஸியான வேலை..

முன்பு திமுகாவில் சொம்படித்துக்கொண்டிருந்த விசு, அனே பதவி எதிர்பார்த்து ஒன்றும் கிடைக்காததால் அதிமுகவுக்கு தாவி, அங்கேயும் ஒன்றும் கிடைக்கததால், காலம் போன கடைசியில் சங்கரா சங்கரா என அப்படியே பாஜகவில் ஐக்கியமானவர்.. இவர் போன்ற ஆட்கள் தாங்கள் எதற்காக கட்சியில் சேர்கிறோம் என தெரியாமலேயே சேர்கிறவர்கள்.. அவர்களது குறிக்கோள் கட்சி கொடுக்கும் பணம்.. வாங்குற காசுக்கு மேல கூவிவிட்டு அப்படியே அடுத்த வேலைக்கு போய்விடுவார்கள்.

சி.ஆர்.சரஸ்வதி, குண்டு ஆர்த்தி, விந்தியா இவர்கள் எல்லாம் மக்களுக்கு தொண்டு செய்த அன்னை தெரசா போல ஆவதற்கா கட்சியில் சேர்ந்தார்கள்..? அதேதான் விசுவுக்கும் பொருந்தும்” என கமல் ரசிகர்கள் விசுவின் உண்மை முகத்தை சோஷியல் மீடியாவில் டார் டாராக கிழித்து வருகிறார்கள்.