மீ டூவில் சிக்காமல் இருக்க நடிகைகளை அறைந்த இயக்குனர்


கடந்த சில நாட்களாக மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஆண்களை குறிப்பாக திரையுலகை சேர்ந்தவர்களை நிலைகுலைய செய்து வருகிறது. இந்தநிலையில் எஸ் .விஜயசேகரன் இயக்கத்தில் உருவான ‘எவனும் புத்தனில்லை’ படத்தின் விழாவில் இயக்குனர் ஆர்.வி .உதயகுமார் ‘மீ டூ’’வை ஒரு பிடி பிடித்தார்..

இந்த விழாவில் பேசிய சிலர் மீ டூ பற்றி குறிப்பிட்டார்கள்… இது என்ன மீ டூ.? ஒரு ஆணும் இன்னொரு ஆணும் உடலுறவு கொள்வதும் ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் உறவு கொள்ளவும் அனுமதி கொடுக்கிறது சட்டம். ஒரு ஆண் ஒரு பெண் உறவு கொள்வது தவறு என்கிறது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கவரப்பட்டு உறவு கொள்வது எப்படி தவறாகும். அப்படி கவரப்படாமல் போனால் பிறப்பு என்கிற லிங்கே விடுபட்டு போகும்..

இது போல் பிரச்சனை வராமல் இருக்கவே நான் படப்பிடிப்புக் ஆரம்பித்த உடனேயே ஹீரோயின்களை திட்டியும் அடித்தும் விடுவேன்…அதற்கு பிறகு எப்படி என்கிட்டே நெருங்குவார்கள்” என்றார் ஆர்.வி.உதயகுமார்