ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டீங்களே சிம்பு.. நீங்க இப்படி பண்ணலாமா..?


மக்கள் பிரச்சனைகளை பேசி வரும் சிம்பு இந்த தேர்தலில் வாக்களிக்க கூட இல்லை, ஏன் தெரியுமா? இதற்கான விளக்கத்தை டி.ஆர் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகருக்கான இடத்தை பிடித்திருப்பவர் சிம்பு. சமீப காலமாக தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அவருடைய சிந்தனையில் சில தீர்வுகளையும் கொடுத்து வருகிறார்.

கடந்த வருடம் கர்நாடக மக்களிடம் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுங்கள் என கோரிக்கை வைத்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். அப்படியிருந்தும் சிம்பு இந்த தேர்தலில் வாக்களிக்க கூட இல்லை.. கரணம். அவர் தற்போது லண்டனில் இருக்கிறார். வர முடியாத சூழலில் இருப்பதால் தான் சிம்பு ஓட்டளிக்கவில்லை என டி.ராஜேந்திரன் கூறியுள்ளார்.. சிம்பு லண்டனுக்கு சென்று ஒருமாதத்திற்கும் மேல் ஆகிறது. வாக்களிக்க வேண்டும் என நினைத்திருந்தால் அவரால் வர முடிந்திருக்கும்.. ஆனால் ஏனோ அவர் அப்படி நினைக்கவில்லை.