தமிழ் திரையுலகை புகழ்ந்த மந்திரா பேடி


சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பில் அதன் தொகுப்பாளராக இருந்து புகழ் பெற்றவர் மந்திரா பேடி.

இதன் மூலம் தமிழில் முதன் முதலாக STR நடித்த “மன்மதன்” படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின் தற்போது வெளியான “சாஹோ“ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
தற்போது வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார் மந்திரா பேடி. தமிழில் படங்கள் நடிப்பது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலாவது

“அங்கு எனக்கு தரப்படும் கதாபாத்திரங்கள் நவீனமாக இருக்கின்றன. வேலை கலாச்சாரம் பல வகைகளில் மும்பையை விட மேம்பட்டதாக இருக்கிறது. அவர்கள் சுறுசுறுப்புடன் வேலை செய்கின்றனர்.
ஒரு பட வேலைக்கான கால நேரம் சரியாக திட்டமிடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள முடிகிறது. எனக்காக கதாபாத்திரங்கள் எழுதப்படுகின்றன. இந்த அனுபவங்கள் என் திறமைகளை பட்டை தீட்ட உதவியதற்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மொழிப் பிரச்சினையைத் தாண்டி வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.