அந்த விஷயத்தில் நயன்தாராவும் சிம்புவும் ஒண்ணுதான்.!


கொடுத்த கால்ஷீட்டை வீணடித்து விட்டர்கள் என்றால் மீதியுள்ள படத்தில் அது பாடல் காட்சி என்றாலும் அதில் ஒருசில நடிகைகள் வேறுவழியில்லாமல் நடித்து கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். இன்னும் சிலரோ நடிக்க எக்ஸ்ட்ரா பேமண்ட் கேட்பார்கள்.. இன்னும் சிலர் ஏதேதோ கூறி நடிக்கவே மறுத்துவிடுவார்கள்.. பின்னர் குறிப்பிட்ட பாடல் இல்லாமல் அந்தப்படம் வெளியாகவேண்டிய சூழல் தான் ஏற்படும்.

‘இது நம்ம ஆளு’ படத்தில் இப்படித்தான் நயன்தாரா கொடுத்த கால்ஷீட்டுகளை, சிம்பு சரியான நேரத்திற்கு ஷட்டிங் வராமல் சொதப்பி வீணடித்ததால், அதில் நடிக்கவேண்டிய நயன்தாரா வரவே முடியாது என டிமிக்கி கொடுத்துவிட்டார். அந்தப்பாடல் இல்லாமல் தான் படமும் வெளியானது.

அதேபோல இப்போது தெலுங்கில் வெங்கடேஷுடன் நடித்துள்ள ‘பாபு பங்காரம்’ என்கிற படத்திலும் ஒரு பாடலை நடித்துக்கொடுக்காமல் வந்துவிட்டாராம் நயன்தாரா. காரணம் அந்த படக்குழுவினரும் ஏதோ பைனான்ஸ் பிரச்சனை காரணமாக சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தாமல் விட்டு, நயன்தாராவின் கால்ஷீட்டை வீணடித்து விட்டார்களாம்.

சரி விஷயத்துக்கு வருவோம்.. நயன்தாரா வராததால் சிம்பு, டென்ஷன் ஆனார் இல்லையா, இப்போது அவரே ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில், இயக்குனர் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து கௌதம் மேனனை கடுப்பேற்றி விட்டார்.. வேறு என்ன..? சம்பள பாக்கி தான் காரணமாம்.. இதனால் என்ன ஆச்சு தெரியுமா..? அந்தப்படத்தில் ஹிட்டான ‘தள்ளிப்போகாதே’ என்கிற பாடலை கௌதம் மேனனால் நினைத்தபடி படமாக்க முடியாமல் போய்விட்டது.

இப்போது அந்தப்பாடல் இல்லாமலேயே படத்தை வெளியிடும் முயற்சியில் கௌதம் மேனன் இறங்கிவிட்டாராம். நட்டம் என்னவோ சிம்புவுக்குத்தான். தனது படத்தில் மீதிக்காட்சிகளை நடித்துக்கொடுக்க நயன்தாரா வராததற்கு டென்ஷனான சிம்பு, இப்போது தானும் அதே வேலையைத்தான் செய்திருக்கிறார்.. இந்த விஷயத்தில் மட்டும் சிம்புவும் நயன்தாராவும் ஒன்றுதான்.