வேந்தர் தொலைக்காட்சியில் – ஒரு சொல் கேளீர்!

ஒரு சொல் கேளீர் (ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9 மணிக்கு)

சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்படும் நிகழ்ச்சி, ஒரு சொல் கேளீர். மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய கருத்துகளை, உள்ளத்தை உருக்கும் வகையில் நெகிழ்வாக எடுத்துச் சொல்வது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. மனித மனங்களில் உண்டாகும் உணர்வுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடுதான் இந்தப் பேச்சரங்கம். தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, மாவட்டம் தோறும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தன்னுடைய பேச்சால் அனைவரையும் கட்டிப்போடும் நாஞ்சில் சம்பத், இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். வேந்தர் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பு அடுத்த சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10 மணி வரை.