அனிருத்தை மறைமுகமாக எச்சரித்த தனுஷ்


நகமும் சதையுமாக இருந்த தனுஷுக்கும் அனிருத்துக்கும் பின்னர் வாய்க்கா தகராறு ஏற்பட்டு பிரிந்தது எல்லாம் ஊரறிந் கதை. சமீபத்தில் தனது பேட்ட படத்துக்கு அனிருத்தை இசையமைக்க வைத்த ரஜினி, அதல் ஒரு பாடலை தனுஷை எழுத வைத்தார். இதன் மூலமாக இருவரும் மீண்டும் நண்பர்களாகிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அதற்கெல்லாம் நான் தயாரில்லை என்று சிலிர்த்தெழுந்திருக்கிறார் தனுஷ்.

அவரது மாரி 2 படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது. இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ் “நான் பிரமித்து பார்த்த ஒரு நட்சத்திரம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாதான். நான் நடித்த முதல் படம், ‘துள்ளுவதோ இளமை’. நான் மட்டுமல்ல அதில் நடித்த மற்ற பலரும், இயக்கிய செல்வராகவனும் கூட புதியவர்கள் தான்.. ஆள் அட்ரஸ் தெரியாத 6 புதுமுகங்கள் இணைந்து நடித்த படம் அது.

அந்தப்படத்திற்கு அடையாளம் தந்ததே யுவனின் இசை தான். அந்தப்படம் ஓடவில்லை என்றால் நிஜமாகவே நாங்கள் நடுத்தெருவில் தான் நின்றிருப்போம். அந்த சூழ்நிலையில் தான் அப்போது நாங்கள் இருந்தோம். துள்ளுவதோ இளமை மற்றும் காதல் கொண்டேன் படங்கள் மிகப்பெரிய ஹிட்டாக யுவன் இசை தான் காரணம். அந்த அஸ்திவாரத்தைப் போட்டுக் கொடுத்ததில் யுவனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அடுத்து அவர் அஜித்தின் படத்திற்கு இசையமைக்க இருப்பதை நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று நெகிழ்ந்துபோய் பேசினார்.

இதுவரை அவர் பேசியது எல்லாம் ஓகே தான். அதன் பிறகுதான் மறைமுகமாக அனிருத்துக்கு குட்டு வைத்தார் தனுஷ். ‘சிலபேர் தப்பா நெனச்சாலும் பரவாயில்லை. இருபது வருசங்களுக்கு மேலாக எதிரில் இருக்கும் இசையமைப்பாளர்களின் பெயர் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் யுவனின் பெயர் மட்டும் அப்படியே இருக்கிறது’ என்றார். இதுதான் அனிருத்தை மனதில் வைத்து தனுஷ் மறைமுகமாக அவரது தலையில் குட்டியிருக்கிறார் என்று பேசுகிறார்கள் கோலிவுட்டில்.