பஞ்சாயத்து, புரமோஷன் எதுக்கும் நான் வரலை” ; ஒதுங்கிய ஜீவா..!


போக்கிரி ராஜா’ படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்பு, சில நாட்களாகவே படம் சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களிலும் படத்தின் நாயகன் ஜீவாவை பார்க்க முடியவில்லை என பலரும் மூளையை குழப்பி வந்தார்கள்.. அதற்கேற்ற மாதிரி இந்தப்படத்தின் ரிலீஸ் சம்பந்தமான பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருந்தபோது ஜீவாவை காணவில்லை.. அதேசமயம் படத்தில் வில்லனாக நடித்த சிபிராஜ் ஆஜராகி ஆச்சர்யப்படுத்தினார்..

அவ்வளவு ஏன் படத்துக்கு துளியும் சம்பந்தம் இல்லாத டி.ராஜேந்தர் கூட வான்டட் ஆக ஆஜரானார்… அப்படி ஜீவாவின் ஆப்சென்ட்டுக்கு காரணம் என்னவாக இருக்கும் என விசாரித்தால் சிபிராஜை நோக்கித்தான் கைகாட்டுகிறார்களாம்..

அதாவது பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் வரை ஜீவா படமாக இருந்த ‘போக்கிரி ராஜா’, இந்தப்படத்தை வெளியிடும் உரிமையை காஸ்மோ வில்லேஜ் நிறுவனம் வாங்கிய பின்னர் சிபிராஜின் படமாக மாறிப்போனதாம். காரணம் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள்…அதனால் தான் கோவையில் வைத்து இசைவெளியீட்டு .விழாவை நடத்தினார்களாம்.

அதுமட்டுமல்லாமல் படத்தின் போஸ்டர் புரமோஷன்களிலும் சிபிராஜை ஜீவா ரேஞ்சுக்கு தூக்கிப்பிடிக்க இதனால் கடுப்பான ஜீவா, புரமோஷன், பஞ்சாயத்து எதுவானாலும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்னை இழுக்காதீர்கள் என நழுவிவிட்டாராம்.