ஹாரிஸ் ஜெயராஜுக்கு குட்பை சொன்ன கே.வி.ஆனந்த்..!


ஒருவாசல் திறந்தால் இன்னொரு வாசல் மூடும்’.. சினிமாவில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை என இப்படி எந்த பழமொழியை வேண்டுமானாலும் இப்போது சொல்லப்போகும் விஷயத்திற்கு மேட்ச் பண்ணிக்கொள்ளுங்கள்..

தொடர்ந்து நான்கு படங்களில் இணைந்து பணியாற்றிய கே.வி.ஆனந்த் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி இப்போது பிரிந்துவிட்டது.. ஆம்.. கே.வி.ஆனந்த் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்திற்கு ஹிப்ஹாப் தமிழன் ஆதியை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.

இத்தனைக்கும் இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளியான ‘அநேகன்’ படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ரகம் தான்.. குறிப்பாக ‘டங்காமாரி’ பாடல் இன்னும் பட்டிதொட்டியெல்லாம் கூட பட்டையை கிளப்புகிறது.. அப்புறம் எதற்காக இந்த பிரிவு என்பதுதான் தெரியவில்லை..

கடந்த வருடம் தான், தான் ஏற்கனவே பிரிந்திருந்த அதனது ஆஸ்தான இயக்குனர் கவுதம் மேனனுடன் மீண்டும் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் ஒன்று சேர்ந்து ஹிட்டும் கொடுத்தார் ஹாரிஸ். அதற்குள் இந்தபக்கம் இன்னொரு ஆஸ்தான இயக்குனர் கூட்டணியை பிரித்துக்கொண்டு போனதில் ஹாரிஸ் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம்.