மெர்சி (இரக்கம்) இல்லாமல் நடக்கும் மெர்சல் இயக்குனர்..!


இளம் இயக்குனர் அட்லீ தொடர்ந்து விஜய் படங்களை இயக்கி வருவதால் தன்னை ஸ்டார் இயக்குனர் அந்தஸ்திற்கு நினைத்துக்கொண்டு இருக்கிறார் போலும்.. அந்த நினைப்பால் தான் ‘மெர்சல்’ பட இயக்குனர் சொந்தமாக புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் தோல்வியை தழுவியது.

ஒரு இயக்குனராக இவர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் இவருடைய தயாரிப்பில் வெளியான படத்தில் நடித்த ஹீரோவுக்கு, 50 லட்சம் மட்டுமே சம்பளமாகக் கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். காரணம் கேட்டால், ‘படம் நஷ்டம்’ என்று கூறி சமாளிக்கிறாராம்.